“அடுக்கு மாடிகள் நிறைந்த கட்டிடக் காட்டில்
வாழ்ந்தாலும் அடுக்குப் பானைகளுக்குள்
தமிழ்தொன்மம்தேடி அள்ளித்தருகிற தமிழச்சியின்
கசிதைப் பணி தொடரட்டும்”
- அறிவுமதி
“உறவுகளையும் ஊர் மக்களையும்
எண்ணித் தாய் என்றும் தாயுமான
தந்தை என்றும் உருகி உருகிக்
கவிஞர் தமிழச்சி எழுதியிருக்கும்
இக்கவிதைகளின்
பொழிவு உலர்ந்த இதயங்களிலும்
ஒரு கனமழையாக இறங்குகிறது”
- த. பழமலய்
“கிராமியச் சூழலில் சுற்றிவர நகர்ந்த வெறும்
மனிதர்களைத் தன்னுடன் உறவிறுத்தி தமிழச்சி
எழுதியிருக்கும் கவிதைகள்
நேர்மையான தொடர்புகையின்
சத்திய மீட்டலாயிருப்பதால்தான்
இரும்புத் தரமும் / தனமும்
பெறுகின்றன.”
- அளவெட்டி சிறீசுக்கந்தராசா

No comment