உயிர்மை பதிப்பகம்
மரியா ரேமோந்தஸ் கலீசிய மொழியில் எழுதிய கவிதைகளை தமிழச்சி தங்கபாண்டியனின் மொழிபெயர்ப்பில் வாசிக்கும்போது கவிதையில் பெண் மொழிக்கு ஒரு சர்வதேச பொதுத்தன்மை இருப்பதை உணர முடிகிறது. நிலத்தாலும் பண்பாட்டாலும் மொழியாலும் கடக்க முடியாத கோபமும் ஆதங்கங்களும் கொண்டது இப் பொதுத்தன்மை. மரியாவின் கவிதைகள் பண்பாட்டின் நுண்ணிய தளங்களில் நுட்பமாகவும் அதேசமயம் உரத்த குரல்களிலும் உரையாடுகின்றன. கலீசிய மொழியில் இருந்து ஒரு கவிஞரின் கவிதைகள் தமிழுக்கு வருவது இதுவே முதல்முறை.
No comment