தமிழச்சி தங்கபாண்டியன், மூத்த எழுத்தாளர்களின் படைப்புகளிலிருந்து பல இளம் எழுத்தாளர்களின் படைப்புகள் வரை தமிழ் இலக்கியப் பிரதிகளினூடே மிக விரிவான பயணத்தைத் தொடர்ந்து நடத்தி வந்திருக்கிறார்.  தனது மொழியில் இயங்குகிற படைப்பாளிகளை இப்படி இடையறாமல் கொண்டாடுவதற்கு படைப்பின்மீதும் படைப்பாளிகள்மீதும் ஒரு பேரன்பு இருக்க வேண்டும்.  தமிழச்சியிடம் அந்தப் பேரன்பு இருக்கிறது.  ஒரு விமர்சகராகவும் படைப்பாளியாகவும் ஒவ்வொரு பிரதியின் ஆதாரமான இழைகளை நெருங்கிச் சென்று தொடுகிறார்.  அந்த வகையில் நவீனத் தமிழ் விமர்சன மரபிற்கு தமிழச்சி ஓர் ஆழமான அர்த்தமுள்ள பங்களிப்பைச் செய்திருக்கிறார் என்று சொல்ல வேண்டும்.

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *