சமீபத்திய நிகழ்வுகள்
இன்று (03.03.2026) தியாகராயர் நகர் - அசோக் நகரில் 7,874 சதுர அடி பரப்பளவில் ரூ.12.74 கோடி மதிப்பீட்டில் CMDA மூலம் கட்டப்பட்டுள்ள முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன நூலகத்தை, கழகத் தலைவர்- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. M. K. Stalin அவர்கள் திறந்து வைத்த நிகழ்வில், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர், பெருநகர சென்னை மாநகராட்சி துணை மேயர், அரசு அதிகாரிகளுடன் கலந்துகொண்டேன்.
இனத்தாலும், மொழியாலும், சிந்தனையாலும் உயர்ந்து நிற்கும் திராவிட இயக்கத்தின் உயிர் மூச்சு — உதயசூரியன் !
60 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தின் சமூக நீதி போராட்டங்களுக்கு ஒளிவிளக்காக திகழ்ந்து வரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் சின்னமான ‘உதயசூரியன்’ அங்கீகாரம் பெற்ற நாளை பெருமையுடன் நினைவுகூர்வோம்.
On 18.01.2026, I spoke at the international panel discussion “The Tamil Voice: Echo or Explosion? Is the World Listening or Are We Talking to Ourselves” at the Chennai International Book Festival 2026, held at Kalaivanar Arangam.
It was truly special to meet Banu Mushtaq, International Booker Prize winner, at the Chennai International Book Festival 2026 at Kalaivanar Arangam.
Her writing has long moved me for its honesty and moral courage, for the way it confronts power while remaining deeply rooted in lived experience. Meeting her in person, in a space filled with readers and conversations about language, justice and resistance, was both affirming and inspiring. Encounters like these remind me why literature continues to shape our thinking, our politics and our collective conscience.
இன்று (20.01.2026), சென்னை - அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில், கழகத் தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள் தலைமையில் நடைபெற்ற, மாண்புமிகு அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டேன்.
கழகத் தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M. K. Stalin அவர்களின் அறிவுறுத்தலின்படி, ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிரான, இந்திய விடுதலை போராட்ட முதல் பெண் வீராங்கனை வீரத் தமிழச்சி அரசி வேலு நாச்சியாரின் பிறந்த நாளான இன்று (03.01.2026), சிவகங்கை - சூரக்குளத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, மாவட்டச் செயலாளர் - மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் KR Periakaruppan திரு.மாங்குடி எம்.எல்.ஏ, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் திருமதி. கா.பொற்கொடி இ.ஆ.ப, அரசு அதிகாரிகள், கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.
30.12.2025 - சோழிங்கநல்லூர், கந்தன்சாவடியில், சோழிங்கநல்லூர் மேற்கு பகுதிச் செயலாளர் திரு.எஸ்.வி.ரவிச்சந்திரன் ஏற்பாட்டில் நடைபெற்ற, திராவிட மாடல் அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில், மாவட்டச் செயலாளர் - மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் Ma Subramanian, கழக கொள்கை பரப்புச் செயலாளர் - தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத் தலைவர் திரு.திண்டுக்கல் ஐ.லியோனி, S.Aravind Ramesh MLA, Prabhakar Raja ஆகியோருடன் கலந்துகொண்டேன்.
இந்நிகழ்வில், பகுதிச் செயலாளர்கள் - மண்டலக்குழுத் தலைவர்கள் திரு.வி.எ.மதியழகன், திரு.கிருஷ்ணமூர்த்தி, மாமன்ற உறுப்பினர் திரு.கே.கண்ணன், ஒன்றியச் செயலாளர் திரு.வெங்கடேசன், சோழிங்கநல்லூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் நா.சந்திரபாபு, தலைமை கழக, மாவட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இன்று (02.01.2026), சென்னை - நுங்கம்பாக்கத்தில், The New Indian Express குழுமம் நடத்திய “ராம்நாத் கோயங்கா சாகித்ய சம்மான்” விருது வழங்கும் விழாவில், இலக்கியத் துறையில் சிறந்து விளங்கிவரும் படைப்பாளிகளுக்கு, மேதகு இத்திய குடியரசுத் துணைத் தலைவர் திரு. CP Radhakrishnan விருது வழங்கிய நிகழ்வில், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் Ma Subramanian, Palanivel Thiaga Rajan, Dr.Kanimozhi NVN Somu எம்.பி, ஆகியோருடன் கலந்துகொண்டேன்.
இந்நிகழ்வில், நீதிபதிகள், தொழிலதிபா்கள், இலக்கியவாதிகள், அரசியல் தலைவா்கள், கலையுலகத்தினா் எனப் பல்வேறு துறைகளைச் சோ்ந்த முக்கியப் பிரமுகா்கள் கலந்துகொண்டனர்.
இன்று (02.01.2026), சோழிங்கநல்லூர் - புழுதிவாக்கம் 186வது வட்டத்தில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் S.Aravind Ramesh MLA-வுடன் கலந்துகொண்டு, கழக நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினேன்.
இந்நிகழ்வில், பகுதிச் செயலாளர் - மண்டலக்குழுத் தலைவர் திரு.எஸ்.வி.ரவிச்சந்திரன், வட்டச் செயலாளர் - மாமன்ற உறுப்பினர் திரு.ஜே.கே.மணிகண்டன், கழக நிர்வாகிகள், முன்னணியினர் கலந்துகொண்டனர்
26.01.2026 அனறு, “வெல்லும் தமிழ் பெண்கள்” என்ற முழக்கத்துடன், தஞ்சாவூர் – செங்கிப்பட்டியில், கழக துணைப் பொதுச் செயலாளர் – கழக நாடாளுமன்றக் குழுத் தலைவர் திருமதி. கனிமொழி கருணாநிதி எம்.பி தலைமையில் நடைபெற்ற “டெல்டா மண்டல மகளிர் மாநாட்டில்” கழகத் தலைவர் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள், கழக இளைஞரணிச் செயலாளர் – மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் ஆற்றிய உரைகள், திராவிட இயக்க வரலாற்றில் பெண்களின் பெருமைமிகு பங்கினையும், திமுக - திராவிட மாடல் ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ள பெண்களுக்கான பல்வேறு நலத் திட்டங்களை விளக்குவதாகவும் அமைந்தன.
27.01.2026 அன்று, சென்னை - கிண்டியில், 6.50 ஏக்கர் பரப்பளவில் ரூ.417.07 கோடி மதிப்பீட்டில், இந்தியாவிலேயே முதன்முறையாக குழந்தைகளுக்கான உயர் சிறப்பு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையக் கட்டடத்திற்கு, கழகத் தலைவர்- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் அடிக்கல் நாட்டிய நிகழ்வில், கழக இளைஞரணிச் செயலாளர் - மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள்,
மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயர், கழக நிர்வாகிகள், அரசு உயர் அதிகாரிகளுடன் கலந்துகொண்டேன்.
28.01.2026 அன்று, சென்னை - கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு அரசு மற்றும் NISAU இணைந்து நடத்தும், இந்தியா உலக கல்வி உச்சி மாநாட்டில் (India Global Education Summit), தி இந்து குழுமத்தின் இயக்குநர் திரு. என். ராம், NISAU நிறுவனர் - தலைவர் திருமதி. சனம் அரோரா, தொழில் முதலீடு மற்றும் வர்த்தகத் துறைச் செயலாளர் திரு. அருண் ராய் இ.ஆ.ப, உயர் கல்வித் துறைச் செயலாளர் திரு. சங்கர் இ.ஆ.ப, TIDCO மேலாண்மை இயக்குநர் திரு. சந்தீப் நந்தூரி இ.ஆ.ப, TIDCO தலைவர் திருமதி. சந்தியா வேணுகோபால் சர்மா இ.ஆ.ப, ஆஸ்திரியா அரசின் பல்கலைக்கழக தரவரிசைகளுக்கான அரசு பிரதிநிதி - வியன்னா பல்கலைக்கழக ஆளுநர் பேராசிரியர். ஹெல்முட் கேர்ன் ஆகியோருடன் கலந்துகொண்டு உரையாற்றினேன்.
சமூக நீதியை அடிப்படையாகக் கொண்டு கல்வியை வளர்த்த வரலாறும், எதிர்காலத்தை நோக்கி பயணிக்கும் திராவிட மாடல் அரசின் முன்னோடித் திட்டங்கள் கொண்ட தமிழ்நாடு, உலக கல்வி அரங்கில் மையமாக திகழ்கிறது என்பதை குறிப்பிட்டு, தமிழ்நாட்டின் கல்வி முறை உலகிற்கே எடுத்துக்காட்டாக திகழும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினேன்.
28.01.2026 அன்று, சென்னை - நந்தம்பாக்கம், வர்த்தக மையத்தில், தமிழ்நாடு அரசு நடத்தும் “உலக மகளிர் உச்சி மாநாடு 2026” விழாவில் நேரடி கேள்வி - பதில் உரையாடல் (Fire Chat) அமர்வில் கலந்துகொண்டு, பெண்கள் அரசியல், சமூக வளர்ச்சி குறித்து கருத்துகளை பகிர்ந்தேன்.
பெண்கள் சாதனையாளராக உயர வேண்டிய அவசியம், அரசியலில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள், பெண்களுக்கு அரசியல் இன்னும் அச்சமூட்டும் களமாக பார்க்கப்படுகிறதா என்ற சமூகப் பார்வை, என் அரசியல் பயணமும் பெண்களுக்காக செய்த பங்களிப்புகளும், எதிர்கால தலைமுறை பெண்களுக்கான வழிகாட்டுதல் ஆகியவை குறித்து கருத்துகளை பகிர்ந்தேன்.
28.01.2026 அன்று - சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெறும் உலக மகளிர் உச்சி மாநாட்டின் நிறைவு விழாவில், கழக இளைஞரணிச் செயலாளர்- மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின், பங்கேற்ற நிகழ்வில், மாண்புமிகு அமைச்சர் திரு. த. மோ. அன்பரசன், அரசு அதிகாரிகளுடன் கலந்துகொண்டேன்.
28.01.2026 அன்று , சென்னை - நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெறும் உலக மகளிர் உச்சி மாநாட்டில், மகளிர் சுய உதவிக்குழுக்கள், மகளிரால் நடத்தப்படும் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் தயாரிப்புகள் அடங்கிய அரங்கினை, கழக இளைஞரணிச் செயலாளர்- மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பார்வையிட்ட நிகழ்வில், மாண்புமிகு அமைச்சர் திரு. த. மோ. அன்பரசன், அரசு அதிகாரிகளுடன் கலந்துகொண்டேன்.
உயர்கல்வி பயிலும் மாணவர்களின் கனவுகளை நனவாக்கும் நோக்கில், 29.01.2026 அன்று, திருவான்மியூர் - சென்னை மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில், "உலகம் உங்கள் கையில்" திட்டத்தின் படி, VHS MA சிதம்பரம் செவிலியர் பள்ளி, VHS MA சிதம்பரம் செவிலியர் கல்லூரி, டாக்டர் எம்.ஜி.ஆர்,ஜானகி கல்லூரி, பேட்ரிசியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை, மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன், ஜெஎம்எச் ஹசன் மெளலானா எம்எல்ஏ, மயிலை த வேலு எம்எல்ஏ, பெருநகர சென்னை மாநகராட்சி துணை மேயர் மு. மகேஷ் குமார் ஆகியோர் வழங்கினோம்.
இந்நிகழ்வில், பெருநகர சென்னை மாநகராட்சி தெற்கு வட்டார துணை ஆணையர் திரு.அப்தாப் ரசூல் இ.ஆ.ப, மண்டலக்குழுத் தலைவர் திரு.துரைராஜ், பேட்ரிசியன் கல்லூரி முதல்வர் முனைவர்.கீதா ரூபஸ், பகுதி பொறுப்பாளர் திரு.விநாயமூர்த்தி, மாமன்ற உறுப்பினர்கள் திருமதி.விசலாட்சி, திருமதி.ராதிகா, திருமதி.கயல்விழி, ஆசிரியர்கள், மாணவர்கள், அரசு அதிகாரிகள், கழகத் தோழர்கள் கலந்துகொண்டனர்.
சென்னை – கலைவாணர் அரங்கில், 28.01.2026 முதல் 29.01.2026 வரை நடைபெற்ற, இந்தியா உலக கல்வி உச்சி மாநாடு (India Global Education Summit) வளாகத்தில், எனது நூல்கள் இடம்பெற்ற அரங்கினைப் பார்வையிட்டு, வாசகர்களுடன் கலந்துரையாடிய போது…
பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு, இன்று (03.02.2026), சென்னை - மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்ற, பொது விருந்து நிகழ்வில், Mylai Velu எம்.எல்.ஏ, கழக தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசகர் திரு.கோவி லெனின், பகுதிச் செயலாளர் திரு.முரளி, கழக நிர்வாகிகள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுடன் கலந்துகொண்டேன்.
இன்று (03.02.2026), மயிலாப்பூரில், தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை சார்பில், பள்ளி செல்லும் சிறார்களுக்கு பகுதி நேர கலை பயிற்சி வழங்கும் “ஜவகர் சிறுவர் மன்றம்” புதிய கட்டடத்தினை மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் M.P.Saminathan திறந்து வைத்த நிகழ்வில், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் Ma Subramanian, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர்.மணிவாசன் இ.ஆ.ப, Mylai Velu MLA ஆகியோருடன் கலந்துகொண்டேன்.
இந்நிகழ்வில், கலை பண்பாட்டுத்துறை - இயக்குநர் திருமதி.ச.வளர்மதி இ.ஆ.ப, இணை இயக்குநர் திருமதி.ஜெ.கார்குழலி, பகுதிச் செயலாளர் திரு.நந்தனம் மதி, மாமன்ற உறுப்பினர்கள் திருமதி.மோ.சரஸ்வதி, திருமதி.ரேவதி, வட்டச் செயலாளர் திரு.ஏழுமலை, கழக நிர்வாகிகள், முன்னணியினர், அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இன்று (03.02.2026), மயிலாப்பூர் – தேனாம்பேட்டையில் நடைபெற்ற “தமிழ்நாடு தலைகுனியாது” பரப்புரை பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு, திராவிட மாடல் அரசு – சமூகநீதி, சமத்துவம், வளர்ச்சி என்ற அடித்தளத்தில், இந்தியாவின் முன்னோடி மாநிலமாக, தமிழ்நாட்டினை நிலைநிறுத்தியுள்ள சிறப்பு பற்றி உரையாற்றினேன்.
இன்று (04.02.2026), வேளச்சேரி சட்டமன்றத் தொகுதியில் ‘தமிழ்நாடு தலைகுனியாது’ பரப்புரையின் ஒரு பகுதியாக, பொதுமக்கள், பொதுநலச் சங்கங்கள், குடியிருப்போர் நலச் சங்கங்கள், கிருத்துவத் திருச்சபை நிர்வாகிகள், மீனவர் நண்பர்கள், வணிகர் சங்கங்கள், சமூக சேவை அமைப்புகள், இளைஞர்கள் மற்றும் மகளிர் பிரதிநிதிகள் உள்ளிட்டோரை சந்தித்து கலந்துரையாடினேன்.
இன்று (04.02.2026), வேளச்சேரி சட்டமன்றத் தொகுதியில் ‘தமிழ்நாடு தலைகுனியாது’ பரப்புரையின் போது, தரமணியைச் சேர்ந்த, கழக மூத்த முன்னோடி - படூர் திரு. பாண்டியன் இல்லம் சென்று நலம் விசாரித்து, அவரது குடும்பத்தினர்களுடன் உணவு அருந்தினோம்.
அவரது குடும்பத்தினருடன் அன்புடன் உரையாடி, ஒன்றாக உணவு அருந்திய தருணம் மனதை நெகிழ வைத்தது. கழக வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் உழைத்த மூத்த முன்னோடிகளின் அனுபவமும், ஆதரவும் தான் நமது இயக்கத்தின் பெரும் பலம்.
இன்று (09.02.2026), நான் மத்திய கலாச்சார அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து, சாகித்ய அகாடமி விருதுகளை அறிவிப்பதில் ஏற்பட்ட காரணமற்ற தாமதத்தை தெளிவுபடுத்தக் கோரி ஒரு கடிதத்தை சமர்ப்பித்தேன்.
அமைச்சகம் பொறுப்புணர்வை உறுதிசெய்து, இந்த விஷயத்தில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன்.
12.02.2026 அன்று, மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தேஜஸ்வி சூர்யா தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற ஜன் விஸ்வாஸ் (விதிகள் திருத்தம்) மசோதா, 2025 மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழுவின் கூட்டத்தில் நான் கலந்து கொண்டேன்.
ஆட்சி அமைப்புகளிடையே வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்கான சாத்தியமான வழிகள் குறித்து விவாதங்கள் நடத்தப்பட்டன.
09.02.2026 அன்று, தமிழ்நாட்டில் தொழிலாளர்களைப் பாதிக்கும் தொழிலாளர் நல ஆதரவு மற்றும் நிதி ஓட்டத்தில் ஏற்படும் தாமதங்கள் குறித்து தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்திடம் கேள்வி எழுப்பினேன்.
தொழிலாளர் நலத் திட்டங்கள் மத்திய அரசால் நிதியளிக்கப்பட்டு இந்தியா முழுவதும் செயல்படுத்தப்படுகின்றன என்றும், #MGNREGS நிதி வெளியீடுகள் செயல்திறன் மற்றும் பயன்பாட்டின் அடிப்படையில் தேவை சார்ந்தவை என்றும் அரசாங்கம் கூறியது.
மில்லியன் கணக்கான தொழிலாளர்களுக்கு, சரியான நேரத்தில் நல ஆதரவு மற்றும் தடையற்ற நிதி ஓட்டம் மிக முக்கியமானவை. தொழிலாளர் பாதுகாப்பு அமைப்புகள் நடைமுறை அல்லது அரசுகளுக்கு இடையிலான தாமதங்களால் பாதிக்கப்படக்கூடாது.
10.02.2026 அன்று, மத்திய திட்டங்களில் பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களின் வரையறுக்கப்பட்ட ஈடுபாடு மற்றும் கிராமப்புற சேவை வழங்கலில் அதன் தாக்கம் குறித்து பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்திடம் நான் கேள்வி எழுப்பினேன்.
PMAY-G போன்ற திட்டங்களில் PRI-கள் வரையறுக்கப்பட்ட பாத்திரங்களை வகிக்கின்றன என்றும், MGNREGS போன்ற திட்டங்களின் கீழ் நிதி வெளியீடுகள் இணக்க நிலைமைகளைப் பொறுத்தது என்றும் அரசாங்கம் கூறியது. பஞ்சாயத்துகளுக்கான நிதி ஆணைய மானியங்கள் மற்றும் டிஜிட்டல் நிர்வாக முயற்சிகளையும் இது எடுத்துக்காட்டியது.
உள்ளடக்கிய கிராமப்புற வளர்ச்சிக்கு உள்ளூர் அமைப்புகளை வலுப்படுத்துவது அவசியம். போதுமான நிதி, செயல்பாடுகள் மற்றும் சுயாட்சியுடன் பஞ்சாயத்துகள் அதிகாரம் பெற வேண்டும்.
11.02.2026 அன்று, தமிழ்நாட்டிற்கு நிலக்கரி வழங்கல் மற்றும் மாநிலங்கள் முழுவதும் சமமான எரிசக்தி வள ஒதுக்கீடு குறித்து நிலக்கரி அமைச்சகத்திடம் கேள்வி எழுப்பினேன்.
நிறுவப்பட்ட திறனுடன் ஒப்பிடும்போது தமிழ்நாடு மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரி வழங்கல் போதுமானதாக இருப்பதாகவும், சமீபத்திய ஆண்டுகளில் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி பங்கு குறைந்துள்ளதாகவும் மத்திய அரசு கூறியது. நிலக்கரி வாயுவாக்கத் திட்டங்களின் கீழ் மாநிலத்திற்கு குறிப்பிட்ட நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை என்பதையும் அது குறிப்பிட்டது.
தமிழ்நாட்டில் தொழில்துறை மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு எரிசக்தி பாதுகாப்பு மிக முக்கியமானது. சுத்தமான நிலக்கரி மற்றும் மாற்ற தொழில்நுட்பங்களுக்கு வெளிப்படையான ஒதுக்கீடு மற்றும் சரியான நேரத்தில் ஆதரவு அவசியம்.
12.02.2026 அன்று, தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னை மற்றும் ஓசூரில் உள்ள MSME கிளஸ்டர்களில் உலகளாவிய வர்த்தக சீர்குலைவுகள் மற்றும் கட்டண நிச்சயமற்ற தன்மைகளின் தாக்கம் குறித்து நான் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகத்திடம் கேள்வி எழுப்பினேன்.
இந்தியாவின் ஏற்றுமதிகள் மீள்தன்மையுடன் இருப்பதாக மத்திய அரசு கூறியதுடன், ஏற்றுமதி ஊக்குவிப்பு மிஷன், கடன் உத்தரவாத ஆதரவு மற்றும் MSMEகளை ஆதரிப்பதற்கான ஏற்றுமதி சுற்றுச்சூழல் அமைப்பு முயற்சிகள் போன்ற நடவடிக்கைகளை எடுத்துரைத்தது.
தமிழ்நாட்டில் உள்ள MSMEகள் முக்கிய வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்றன. உலகளாவிய இடையூறுகளை எதிர்கொள்ளும் போது, வேலைகள் மற்றும் ஏற்றுமதிகளைப் பாதுகாக்க இலக்கு ஆதரவு, விரைவான கடன் ஓட்டம் மற்றும் மாநில-குறிப்பிட்ட நிவாரணம் அவசியம்.
அறிவித்த உறுதிமொழிகளையெல்லாம்
நிறைவேற்றிய அன்புத் தலைவர்.
கலைஞர் உரிமைத் தொகையினை
மகளிருக்கு மூன்று மாதங்களுக்கு முன்கூட்டியே வழங்கியும், கோடைகால சிறப்புத் தொகையும் அளித்து, வரலாற்றுச் சாதனை செய்யும் தாயுமானவர்.
அரசியல் எதிரிகளின் சதிகளை முறியடித்து, வெற்றிக்கொடி நாட்டும் திராவிடமாடல் நாயகருக்கு நன்றி.. நன்றி..
வெல்வோம் இருநூறு..
படைப்போம் வரலாறு..
இன்று (15.02.2026), அடையாறில், 60 கோடியே 68 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ராஜீவ் காந்தி சாலை (OMR) மற்றும் சர்தார் பட்டேல் சாலையை இணைக்கும் மத்திய கைலாஷ் சந்திப்பில் கட்டப்பட்டுள்ள “L” வடிவ மேம்பாலத்தை, கழகத் தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
@mkstalin
அவர்கள் திறந்து வைத்த நிகழ்வில் கலந்துகொண்டேன்.
இன்று (15.02.2026), சோழிங்கநல்லூர் - பாலவாக்கத்தில், 183வது வார்டு புதிய அலுவலக கட்டடத்தினை, மாவட்டச் செயலாளர் - மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்
@Subramanian_ma
,
@S_AravindRamesh
ஆகியோர் திறந்து வைத்தோம்.
16.02.2026 - திண்டுக்கல், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி சின்னாளப்பட்டியில் ‘தமிழ்நாடு தலைகுனியாது’ பரப்புரையின் ஒரு பகுதியாக, பொதுமக்கள், பொதுநலச் சங்கங்கள், வணிகர் சங்கங்கள், சமூக சேவை அமைப்புகள், தொழில் முனைவோர், விவசாய பெருமக்கள் உள்ளிட்டோரை சந்தித்து கலந்துரையாடினேன்.
மாநில சுயாட்சியை வலுப்படுத்த இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்று நேற்று அவர் கூறினார். கூட்டு விருப்பமும் தொடர்ச்சியான முயற்சியும் இருந்தால், அரசியலமைப்பு மாற்றம் சாத்தியம் என்று அவர் உறுதியாக வலியுறுத்தினார்.
இந்த குறிப்பிடத்தக்க தருணத்தில், நமது சின்னமான தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் 24.04.1974 அன்று மாநில சுயாட்சி குறித்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை நான் நினைவு கூர்கிறேன். அந்த விவாதத்தின் போது தமிழ்நாடு சட்டமன்றத்தில் எனது தந்தை, முன்னாள் அமைச்சர் திரு. வி. தங்கபாண்டியன் ஆற்றிய உரையையும் நான் பெருமையுடன் நினைவு கூர்கிறேன்.
இன்று (20.02.2026), சென்னை - கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் ‘தமிழ்நாடு தலைகுனியாது’ பரப்புரையின் ஒரு பகுதியாக, பொதுமக்கள், பொதுநலச் சங்கங்கள், வணிகர் சங்கங்கள், சமூக சேவை அமைப்புகள், தொழில் முனைவோர் உள்ளிட்டோரை சந்தித்து கலந்துரையாடினேன்.
கழகத் தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
@mkstalin
அவர்களின் அன்பும் அர்ப்பணிப்பும் காத்து வளர்த்த இந்த தொகுதியில் மக்கள் நலத் திட்டங்கள் ஒவ்வொன்றும் உயிரோட்டத்துடன் செயல்படுத்தப்பட்டு, இன்று தமிழ்நாட்டில் முன்னணி தொகுதியாக பெருமையுடன் திகழ்கிறது” என்று அனைத்து தரப்பினரும் மனமகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.
22.02.2025 - முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் ‘தமிழ்நாடு தலைகுனியாது’ பரப்புரையின் ஒரு பகுதியாக, பொதுமக்கள், பொதுநலச் சங்கங்கள், வணிகர் சங்கங்கள், சமூக சேவை அமைப்புகள், தொழில் முனைவோர் உள்ளிட்டோரை சந்தித்து கலந்துரையாடினேன்.
22.02.2026 - முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற “தமிழ்நாடு தலைகுனியாது” பரப்புரையின் ஒரு பகுதியாக, கழக மூத்த முன்னோடி திரு.சண்முகம் அவர்களின் இல்லத்தில்
22.02.2026 - முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற “தமிழ்நாடு தலைகுனியாது” பரப்புரையின்போது சுதந்திரப் போராட்ட தியாகி அய்யா திரு.கோபாலகிருஷ்ண யாதவ் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.
22.02.2026 - முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற “தமிழ்நாடு தலைகுனியாது” பரப்புரையின்போது, தெய்வீகத் திருமகன் அய்யா உயர்திரு. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.
22.02.2026 - முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற “தமிழ்நாடு தலைகுனியாது” பரப்புரை பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு திராவிட மாடல் அரசின் சாதனைகளை எடுத்துரைத்து உரையாற்றினேன்.
ஸ்டாலின் தொடரட்டும்!
தமிழ்நாடு வெல்லட்டும்!
இன்று (23.02.2026) அடையாறு - தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.4,07,200 / - மதிப்பீட்டில், நான்கு மாற்றுத்திறனாளி நண்பர்களுக்கு, இணைப்பு சக்கரம் பொறுத்தப்பட்ட, இருசக்கர வாகனங்களை வழங்கினேன்.
கழகத் தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
@mkstalin
அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று (23.02.2026), சென்னை - பாரிமுனையில், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்
@PKSekarbabu
அவர்கள் ஏற்பாட்டில், அன்னை தயாளு அம்மாள் தொண்டு நிறுவனம், மூலம் பயிற்சி பெற்ற பெண்களுக்கு, தையல் இயந்திரம் மற்றும் சான்றிதழ்களை, திரைக்கலைஞர் திருமிகு. சுகாசினி மணிரத்னம், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர்
@PriyarajanDMK
ஆகியோர் வழங்கினோம்.
அரசுப் பள்ளி மாணவர்கள் JEE தேர்வில் பெற்றுள்ள சிறப்பான வெற்றி, குறிக்கோள் மிக்க பொதுக் கல்வி மற்றும் சம வாய்ப்பின் தாக்கத்தை வெளிப்படுத்துகிறது. தமிழ்நாடு தொடர்ந்து கல்வி ஆதரவு, வழிகாட்டுதல் மற்றும் அனைவர் உட்சேர்க்கை கொள்கைகளில் முதலீடு செய்து வருவதால், மாணவர்கள் தேசிய மட்டத்தில் தன்னம்பிக்கையுடன் போட்டியிடும் நிலைக்கு வந்துள்ளனர். சமூக நீதி மற்றும் அனைவருக்கும் அணுகக்கூடிய கல்வியை அடிப்படையாகக் கொண்ட ஒரு முன்னுதாரணமாக இந்த சாதனை திகழ்கிறது.
மாண்புமிகு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் தொலைநோக்கு தலைமைக்கீழ், கல்வி எப்போதும் மக்கள்மையக் கொள்கையாக முன்னுரிமை பெற்றுள்ளது. அரசுப் பள்ளிகளை வலுப்படுத்துதல், முதல் தலைமுறை கற்றலாளர்களை வலுப்படுத்துதல் மற்றும் தரமான கல்வியை அனைவருக்கும் கிடைக்கச் செய்தல் ஆகியவற்றில் அவர் கொண்டுள்ள உறுதியான அர்ப்பணிப்பு, கனவுகளை சாதனைகளாக மாற்றியுள்ளது. JEE வெற்றி, ஒவ்வொரு குழந்தையும் உயர்ந்து வெற்றி பெற வேண்டும் என்ற நம்பிக்கையுடன் செயல்படும் திராவிட மாடல் தலைமையின் உண்மையான பிரதிபலிப்பாகும்.
இன்று (24.02.2026), கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற ‘தமிழ்நாடு தலைகுனியாது’ பரப்புரையின் ஒரு பகுதியாக, பொதுமக்கள், பொதுநலச் சங்கங்கள், வணிகர் சங்கங்கள், சமூக சேவை அமைப்புகள், தொழில் முனைவோர் உள்ளிட்டோரை சந்தித்து கலந்துரையாடினேன்.
இன்று (24.02.2026), கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற ‘தமிழ்நாடு தலைகுனியாது’ பரப்புரையின்போது, கோவில்பட்டி நகர கழக அலுவலகத்திலுள்ள, முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.
இன்று (24.02.2026), கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற “தமிழ்நாடு தலைகுனியாது” பரப்புரை பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினேன்.
இன்று (26.02.2026), விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற ‘தமிழ்நாடு தலைகுனியாது’ பரப்புரையின் ஒரு பகுதியாக, பொதுமக்கள், பொதுநலச் சங்கங்கள், வணிகர் சங்கங்கள், தொழில் முனைவோர் உள்ளிட்டோரை சந்தித்து கலந்துரையாடினேன்.
இன்று (18.01.2026), சென்னை - கலைவாணர் அரங்கில் நடைபெற்ற, பன்னாட்டுப் புத்தகத் திருவிழா நிறைவு விழாவிற்கு வருகை புரிந்த, கழகத் தலைவர்- மாண்புமகு தமிழ்நாடு முதலமைச்சர் M. K. Stalin அவர்களை வரவேற்ற போது.
இன்று (26.02.2026), விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற “தமிழ்நாடு தலைகுனியாது” பரப்புரை பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினேன்.
ஸ்டாலின் தொடரட்டும்!
தமிழ்நாடு வெல்லட்டும்!
இன்று (27.02.2026), ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற ‘தமிழ்நாடு தலைகுனியாது’ பரப்புரையின்போது, பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.
இன்று (01.03.2026), சென்னை – அண்ணா அறிவாலயத்தில், கழகத் தலைவர் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தோம்; மரியாதையுடன் வணங்கி ஆசீர்வாதம் பெற்றோம்.
அரசியல்
தென் சென்னை தொகுதி &
நாடாளுமன்ற செயல்பாடுகள்
நாடாளுமன்ற உறுப்பினர் பணிகள்
பாரத பிரதமரின் தேசிய நிவாரண நிதி
கிராம தத்தெடுப்பு திட்டம்
தென் சென்னை தொகுதி குறைதீர்ப்பு
இலக்கியம்
நூல்கள், உரைகள் &
கட்டுரைகள்
தமிழச்சி தங்கப்பாண்டியன்
மனித மனங்களை ஈரப்படுத்தும் கருத்துகள்
பின்காலனிய மற்றும் புலம்பெயர்
கலீசிய மொழியில் எழுதிய கவிதைகள்
01
தமிழச்சியின் கவிதையும், அரசியலும்
ஒரு மூன்றாம் உலகப், பின் காலனீயக், கிழக்கு ஆசியப் பிரஜையின் குரலை,
அரசியலை என் கவிதை முன்வைக்கின்றது.
தொன்மவியலும், நாட்டுப்புற வழக்காற்றியலும், சடங்குகளும், சிறுதெய்வ வழிபாட்டு முறையும், நாட்டார் கலைகளும், செவிவழிச் சொலவடைகளும், நம்பிக்கைகளும், பழ மரபுக் கதைகளும் கொண்ட உலகம் எனது. நான் அந்த கரிசல் நிலத்தின் இடைச்சி, மேய்ச்சி, பேச்சி.
யூங்கின் கூற்றுப்படி ‘முழுமையையும், சுயத்தையும்’எனது கவிதைகள் வழி நேர்த்தியாகச் சொல்ல முயற்சிப்பவள். அவரது கூற்றுப்படியே ‘நனவு நிலையில் தனி மனுஷியாக இருந்தாலும், நனவிலியில் கூட்டு மனிதராக இருக்கிறேன்’.
உரைகள்
அரசியல் & இலக்கியம்
03
சுவாரஸ்யமான தலைப்புகள்
பகுத்தறிவு பேரவை
தனிநபர் மசோதா
மக்களின் குரல் • உறுப்பினரின் உரிமை • ஜனநாயக மரபு.
04
சமீபத்திய நிகழ்வுகள்
நேர்காணல்கள்


ஒரு குழுவை உருவாக்க பயன்படும் பொது பெருமைக்குரிய மக்கள் அரசியல் கட்சி.
கணினியில் உள்ள மென்பொருள் அல்லது செயலியின் நிரல்களை நேரடியாக பார்க்க.
அறிவியல், கணிதம், வரலாறு · இதர · இயற்கை நல வாழ்வு · கல்வி , விளையாட்டு. மற்றும் இன்னும் பல...
