நிழல் வெளி


உயிர்மை பதிப்பகம்

பின்காலனிய மற்றும் புலம்பெயர் கோட்பாடுகள் சார்ந்த விவாதங்களின் அடிப்படையில், மக்கின்ரயரின் நாடகங்களை இப்புத்தகம் மிகக் கவனமாக அணுகுகிறது. அதேசமயம், இலங்கையின் புலம்பெயர் வரலாற்றுப் பின்னணியையும் கவனத்தில் கொண்டிருக்கிறது. இடப்பெயர்ச்சி நிகழ்வானது, தாயகத்துடன் எவ்வாறு தொடர்பு கொண்டுள்ளது என்பதையும், புலம் பெயர்ந்த நாட்டின் சமூக-அரசியல் சூழலை இனம், மொழி, வர்க்கம் ஆகிய குறிப்பிட்ட வேறுபாடுகளை மிகச் சரியாகக் கவனத்தில் கொண்டும் பரிசீலிக்கிறது. மக்கின்ரயரின் அங்கத நாடகங்கள் ஆஸ்திரேலிய மற்றும் இலங்கைப் பார்வையாளர்களுக்கு வெளிப்படுத்தும் செய்திகளை மிகத் தெளிவாகக் கண்டடைகிறது. இரண்டு நாடுகளுக்கிடையேயான இலக்கிய அறிவுப் புலத்தில் இப்புத்தகம் ஒரு முக்கியமான சேர்க்கை. மக்கின்ரயரின் படைப்புகள் வெகுவாக அறியப்படவும் போற்றப்படவும் வேண்டியவை. இப்புத்தகம் அதை நிறைவேற்றக்கூடிய பெறுமதி மிக்கது. பேரா.பால் ஷராட், ஆங்கில இலக்கியம்/கலைகள், வொல்லோகாங் பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியா.

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *